வியாழன், 15 ஏப்ரல், 2010

இன்பம் உன் கையில்

இன்பம் உன் கையில்
துன்பமே இல்லாத வாழ்க்கையென்று ஒன்றுண்டா?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவிதமான துன்பம் . ஆனால் மனிதனோ துன்பமே இல்லாத வாழ்க்கை
தான் வேண்டும் என்று எண்ணுகின்றான்.

நாம் நம்மை சுற்றியுள்ள இயற்கையை கவனித்தாலே போதுமே. இரவும் பகலும் சேர்ந்தேதானே இருக்கின்றது
வெயில் என்ற ஒன்று இருந்தால்தானே நிழலின் அருமை தெரியும் . எந்த ஒன்றுமே மிகவும் சுலபமாக
கிடைத்து விட்டால் அதன் சுவாரசியம் போய்விடும். உதாரணமாக நான் சிறு வயதில் இருக்கும் போது சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வீட்டில் வருடத்திற்கு ஒரு முறைதான் சினிமாவுக்கு அழைத்துப் போவார்கள் . அதுவும்
ஆதி பராசக்தி , சக்தி லீலை, திரு நீலகண்டர் ,சிவகவி , போன்ற படங்கள் தான். எப்போதாவது பிற படங்களும் அழைத்து
செல்வதுண்டு. அதனால் சினிமாவின் மீது ஒரு மோகம் உண்டு. சிறிது காலம் கழித்து தொலைகாட்சி வந்தபோது
1975 ல் வாராவாரம் வெள்ளிக்கிழமை யன்று 5 அல்லது 6 பாடல்கள் மட்டும் ஒலிபரப்புவார்கள் . அந்த சமயத்தில் தெருவில் சென்று பார்க்க வேண்டுமே ஒரு தலையையும் காண முடியாது. எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு அமர்ந்திருப்பர்கள். பக்கத்து வீட்டிற்காவது சென்று காண்பர். ஆனால் இன்று உள்ள நிலை யென்ன? ஒரு சேனலுக்கு
பல சேனல்கள் மாறி மாறி இருபத்து நான் கு மணி நேரமும் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அன்று இருந்த
மகிழ்ச்சி இன்று இருக்கின்றதா? ஏனெனில் சுலபாக கிடைத்து விட்டது. அதுபோலவே முன்பெல்லாம் பொங்கல்
தீபாவளி ய்ன்று மட்டும் உடை எடுத்து தருவது வழக்கம். அன்று அந்த உடைக்காகவே தீபாவளி வருவதை மாதக் கணக்கில் எதிர் பார்த்துக் கொண்டிருப்போம்.இன்று நினைத்தால் உடை வாங்கலாம் என்றாகி விட்டது. நாமெல்லோரும் ஒரு விஷயத்தைகவனிக்க மறந்து விடுகின்றோம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒன்று கிடைப்பதில்லை
அந்த கிடைக்காத ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு போராடிக்கொண்டு இருக்கின்றோம்.. ஆனால் பிறருக்கு கிடைக்காத ஒன்று நமக்கு கிடைக்கின்றது என்னும் விஷ‌யம் நமக்கு தெரிவதே இல்லை. நம் கையை திறந்து பார்த்தால்
இறைவன் அற்புதமான விஷயங்களை கொடுத்திருக்கினறான். அதை கண்டு பிடிப்பதே ஒரு பாக்கியம் என்றுதான்
நினைக்கின்றேன். அதற்காகவே வாழ் நாளெல்லாம் இறைவனுக்கு நன்றியை செலுத்தவேண்டும். அவ்வளவு
கொடுத்திருக்கின்றான்.. அதை உணர்ந்தால் போதும் துன்பம் என்பது தூசிபோலாகிவிடும்

கபீர் தாசர் சொல்லுகிறார்.எல்லோரும் துன்பம் வரும் போது மட்டும் இறைவனை வேண்டுகின்றோம் .
எவரொருவர் சுகத்தில் கூட இறைவனை நினைக்கின்றானோ அவனே மேலானவன். என்கின்றார். இங்கே சிறிய
அளவு துக்கம் வரும்போதுதான் அந்த இறைவனையும் கேட்கிறார்கள். ஆனால் பெரிய துன்பம் வரும் போது அப்படி இருப்பதுண்டா? கடவுளே உனக்கு கண்ணில்லையா? ஆயிரம் தெய்வம் இருக்கின்றீர்களே ஒரு தெய்வமாவது வந்து என்னைக் காப்பாற்ற்வில்லையே என்று புலம்புவது இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது.
எப்படி வந்து காப்பாற்ற முடியும்? முன் காலத்தில் பாருங்கள். ஒரே ஒரு இறைவனிடம் தொடர்பு வைத்திருந்தார்கள். மீராவை எடுத்துக் கொண்டால் அவர் கண்ணனையே நினைத்திருப்பார். ஆழ்வார்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் திருமாலையே
இறைவனாக ஏற்றுக் கொண்டு பாடிவந்தார்கள். அருணகிரி நாதர் போன்றோர் முருகனை வழிபட்டனர்.
நம்பியாண்டார் நம்பி அவர்கள் வினாயகரையே தனது இறைவனாக வழிபட்டார். இப்படி அவரவர்கள் ஒரே ஒரு
இறைவனைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசவும் செய்வார்கள். அப்போதுதான் அந்த் இறைவன் நமக்காக
இறங்கி வந்து அருள் புரிவது காண முடியும்.அவர்களில் சிலர் பிற தெய்வத்தை தூற்றவும் இல்லை. அந்த தெய்வத்தை
காண நேரிட்டாலும் அங்கே தனது தெய்வத்தின் நினைவுதான் வரும்.
இறைவன் தான் மனிதனை உருவாக்கினான். அந்த மனிதனோ மீண்டும் இறைவனை உருவாக்கினான்.
உருவமில்லாத அந்த ஒரே பரம்பொருளை உருவத்தில் கொண்டு வந்து விளையாட ஆரம்பித்தான். அந்தப் பரம்பொருளும் மனிதனுக்காக இறங்கிவந்து அந்த உருவத்தை ஏற்றுக் கொண்டு மனிதனோடு தொடர்பு கொண்டு அவனுக்கு எல்லா உதவியும் அவ்வப்போது செய்து வந்தது. இதுவே உண்மை. உருவமுள்ள இறைவன் இல்லையென்றால் உருவமில்லாத இறைவனும் இல்லைதானே.
இஸ்லாமியர்கள் யாரேனும் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை ஏக இறைவன் என்பதுதான் சரி. நீங்கள் உருவமில்லாத அந்த ஒரே இறைவனை வணங்குவது தான் சரி.எனவே மனம் புண்படவேண்டாம்.இது குழப்பத்திலிருக்கும் ஒரு சில இந்து மக்களுக்காக எழுதுவது.அவரவர்கள் அவரவர் மதத்தைப்
பின்பற்ற வேண்டும். மதத்தின் காரணமாக இரு சகோதரர்களுக்குள் சண்டைவருகிறதென்றால் நான் அந்த மதத்தையே மனதளவில் தூக்கி எறிய தயாராக உள்ளேன். மொழியின் காரணமாக இரு சகோதரருக்குள் சண்டை வருகிறதென்றால் அந்த மொழியை
மனதளவில் தூக்கி எறிய நான் தயாராக உள்ளேன். அன்பு ஒன்றே உலகில் ஆட்சி செய்கின்றது. அந்த ஒரே இறைவன்
நாம் செய்யும் இந்த சிறு பிள்ளைத் தனமான செய்கையை கண்டு சிரிக்காமலா இருப்பான்?
இராம கிருஷ்ண பரம ஹம்ஸர் அவர்கள் ஒரு அருமையான உதாரணம் ஒன்றை அடிக்கடி சொல்லுவார். தண்ணீரானது கொதிக்கவைக்கும் போது அது ஆவியாகி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. அதே தண்ணீரை குளிர வைத்தாலோ
அது பனிக் கட்டியாகவே மாறி விடுகின்றது. உருவமில்லாத அந்த தண்ணீர்தான் இப்போது ஒரு உருவம் கொண்டிருக்கின்றது அல்லவா? அது போல் தான் இறைவனும். பண்டைய உப நிஷதங்களிலெல்லாம் கூறப் பட்டிருக்கும்
அந்த உருவமில்லாத இறைவன் தான் இன்று உருவாகி வந்து நம்மை எல்லாம் ஆட்கொண்டிருக்கின்றான்.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

வெள்ளி, 15 ஜனவரி, 2010

நான் கடவுள்

என் கண்கள் வழியே நான் பார்த்த‌ உலகத்தை என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.இவை என் கருத்துக்களே யன்றி பிறர் மீது திணிப்பது எனது நோக்கமில்லை. எனது சிந்தனைகள் பிறரது சிந்தனையை தூண்டிவிட்டு அவர்களும் உண்மையை கண்டு பிடிக்க உதவலாம். எனது உண்மையும் உண்மையில் உண்மையில்லாமல் கூட இருக்கலாம்.வேறொரு பரிமாணத்தில் அணுகும் போது உடைந்து போக‌லாம் குறிப்பு: எல்லோரும் பெரும்பாலான பதிவுகளில் என்னைப் பற்றி என்ற‌ இடத்தில் "என்னை பற்றி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை ". என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனக்கு என்னை பற்றி சொல்லி கொள்வதற்கு நிறைய இருக்கிறது. என்றுதான் சொல்வேன். அப்படி எழுதியுள்ள அன்பர்கள் தயவு செய்து மாற்றி கொள்ளுஙகள்.ஏனெனில் உஙகளிடம் சொல்லி க் கொள்ள நிறையவே இருக்கிற்து உண்மையில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லாத எனக்கே நிறைய சொல்ல வேண்டும் என்றிருக்கும் போது இத்தனை படைப்புகளை பிரமாதமாக தந்திருக்கும் உஙகளிடமா இல்லை. இன்னமும் உஙகளிடம் ஒன்றுமில்லை என்று நினைத்தால் தயவு செய்து என்னிடம் வாருங்கள் . நான் கண்டு பிடித்து தருகிறேன். உஙகள் திறமையை..எல்லோரிடமும் ஒரு திறமை எங்கோ ஒளிந்து கொண்டு தானிருக்கிறது.

நான் கடவுள் என்றால் என்னால் எல்லாமே முடியுமா? நான் எப்போது கடவுளாகிறேன்?எப்படி ஆகிறேன்? அதற்கு பொருளென்ன ? அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். கடல் இருக்கிறது. அதன் நீரை ஒரு கையில் அள்ளிப் பாருஙகள்.அந்த கடல் நீருக்கும் கை நீருக்கும் என்ன வித்தியாசம் . அடிப்படையில் ஒன்றுமே இல்லை இரண்டிலும் ஒரே கூறுகள் தானே உள்ளன.

ஒரு துளி நீரிலும் அது தானே இருக்கிறது . ஆனால் அந்த துளியால் அப்படி என்ன செய்து விட முடியும். ஆனால் கடலின் வீச்சு சுனாமியின் போது எப்படி இருந்தது ?

அது போல் தான் நாமும் கடவுளின் குழந்தைகள் தான் நாம் க்டவுளின் குணமனைத்தும் நமக்கும் உள்ளன.” praise the lord “என்று சொல்வார்கள். திருவிளையாடல் படத்தில் கூட ந்ற்ற‌மிழால் எம்மை பாடுக என்று சிவன் கேட்பது போல் ஒரு காட்சி வரும்.தேவாரத்தையும் ,திருவாசகத்தையும் பிரபந்தத்தையும் பாட வைத்து இறைவன் ரசிப்பதுண்டு.அத்னால் தானோ நாமும் நம்மை பற்றி பிறர் புகழ வேண்டும் என்று எப்போதும் எண்ணுகிறோமோ என்னவோ? தயவு செய்து யாரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். எனது கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

கடவுளின் ஒரு துளியாகிய நாம் அந்த‌ கட‌லில் சென்று சேரும் வரை { ஜீவன் முக்தி நிலை கிடைக்கும் வரை குடத்தின் காற்றானது ஆகாயத்தில் கலக்கும் வரை} அந்த கடவுளைத் தான் நாம் வேறு வடிவில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

பணம், புகழ், பெயர் என்று வெவ்வேறு வடிவத்தில் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரை நாத்திகர்கள் என்றும் ஆத்திகர்கள் என்று இரு பிரிவுகள் இல்லை
என்றே கூறுவேன். இருவருக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை

ஏனெனில் நாத்திகன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் கூட தன்னை விட வயதில் மூத்த்வர் அல்லது தனது மதிப்பிற்குரிய ஒருவர் தன் வீட்டிற்கு வரும் போதோ அல்லது தான் அவரது வீட்டிற்கு செல்லும் போதோ கையை எடுத்து நமஸ்கரிப்பதோ அல்லது கால்களில் விழுவதோ கூட பழக்கமாயிருக்கிறது.

நம்மை விட சிறிதளவே வயதிலோ அல்லது பதவியிலோ அல்லது குணத்திலோ பெரியவரை காணும் போது இப்படி நடந்து கொள்கிறோம் என்றால் இப்பிரபஞச‌த்தையே படைத்த அந்த கடவுளை வணஙகுவது எப்படி குற்றமாகும்.அது மட்டுமல்ல. அவர்கள் தஙகளுக்கு மீறிய சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக நம்புகிறார்கள்.

அதை இயற்கை என்றோ அல்லது வேறு ஏதோ வென்று கூட சொல்லிகொள்ளட்டுமே. அதைதான் நாம் கடவுள் என்று சொல்லிக் கொள்கிறோம். எனவே அந்த சகோதரர்களும் கூட ஆத்திகர்கள் தான். அவர்களும் கூட எதையோ நம்புபவர்கள் தான்.


"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே."