வெள்ளி, 15 ஜனவரி, 2010

நான் கடவுள்

என் கண்கள் வழியே நான் பார்த்த‌ உலகத்தை என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.இவை என் கருத்துக்களே யன்றி பிறர் மீது திணிப்பது எனது நோக்கமில்லை. எனது சிந்தனைகள் பிறரது சிந்தனையை தூண்டிவிட்டு அவர்களும் உண்மையை கண்டு பிடிக்க உதவலாம். எனது உண்மையும் உண்மையில் உண்மையில்லாமல் கூட இருக்கலாம்.வேறொரு பரிமாணத்தில் அணுகும் போது உடைந்து போக‌லாம் குறிப்பு: எல்லோரும் பெரும்பாலான பதிவுகளில் என்னைப் பற்றி என்ற‌ இடத்தில் "என்னை பற்றி சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை ". என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனக்கு என்னை பற்றி சொல்லி கொள்வதற்கு நிறைய இருக்கிறது. என்றுதான் சொல்வேன். அப்படி எழுதியுள்ள அன்பர்கள் தயவு செய்து மாற்றி கொள்ளுஙகள்.ஏனெனில் உஙகளிடம் சொல்லி க் கொள்ள நிறையவே இருக்கிற்து உண்மையில் சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லாத எனக்கே நிறைய சொல்ல வேண்டும் என்றிருக்கும் போது இத்தனை படைப்புகளை பிரமாதமாக தந்திருக்கும் உஙகளிடமா இல்லை. இன்னமும் உஙகளிடம் ஒன்றுமில்லை என்று நினைத்தால் தயவு செய்து என்னிடம் வாருங்கள் . நான் கண்டு பிடித்து தருகிறேன். உஙகள் திறமையை..எல்லோரிடமும் ஒரு திறமை எங்கோ ஒளிந்து கொண்டு தானிருக்கிறது.

நான் கடவுள் என்றால் என்னால் எல்லாமே முடியுமா? நான் எப்போது கடவுளாகிறேன்?எப்படி ஆகிறேன்? அதற்கு பொருளென்ன ? அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். கடல் இருக்கிறது. அதன் நீரை ஒரு கையில் அள்ளிப் பாருஙகள்.அந்த கடல் நீருக்கும் கை நீருக்கும் என்ன வித்தியாசம் . அடிப்படையில் ஒன்றுமே இல்லை இரண்டிலும் ஒரே கூறுகள் தானே உள்ளன.

ஒரு துளி நீரிலும் அது தானே இருக்கிறது . ஆனால் அந்த துளியால் அப்படி என்ன செய்து விட முடியும். ஆனால் கடலின் வீச்சு சுனாமியின் போது எப்படி இருந்தது ?

அது போல் தான் நாமும் கடவுளின் குழந்தைகள் தான் நாம் க்டவுளின் குணமனைத்தும் நமக்கும் உள்ளன.” praise the lord “என்று சொல்வார்கள். திருவிளையாடல் படத்தில் கூட ந்ற்ற‌மிழால் எம்மை பாடுக என்று சிவன் கேட்பது போல் ஒரு காட்சி வரும்.தேவாரத்தையும் ,திருவாசகத்தையும் பிரபந்தத்தையும் பாட வைத்து இறைவன் ரசிப்பதுண்டு.அத்னால் தானோ நாமும் நம்மை பற்றி பிறர் புகழ வேண்டும் என்று எப்போதும் எண்ணுகிறோமோ என்னவோ? தயவு செய்து யாரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். எனது கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

கடவுளின் ஒரு துளியாகிய நாம் அந்த‌ கட‌லில் சென்று சேரும் வரை { ஜீவன் முக்தி நிலை கிடைக்கும் வரை குடத்தின் காற்றானது ஆகாயத்தில் கலக்கும் வரை} அந்த கடவுளைத் தான் நாம் வேறு வடிவில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

பணம், புகழ், பெயர் என்று வெவ்வேறு வடிவத்தில் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரை நாத்திகர்கள் என்றும் ஆத்திகர்கள் என்று இரு பிரிவுகள் இல்லை
என்றே கூறுவேன். இருவருக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை

ஏனெனில் நாத்திகன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் கூட தன்னை விட வயதில் மூத்த்வர் அல்லது தனது மதிப்பிற்குரிய ஒருவர் தன் வீட்டிற்கு வரும் போதோ அல்லது தான் அவரது வீட்டிற்கு செல்லும் போதோ கையை எடுத்து நமஸ்கரிப்பதோ அல்லது கால்களில் விழுவதோ கூட பழக்கமாயிருக்கிறது.

நம்மை விட சிறிதளவே வயதிலோ அல்லது பதவியிலோ அல்லது குணத்திலோ பெரியவரை காணும் போது இப்படி நடந்து கொள்கிறோம் என்றால் இப்பிரபஞச‌த்தையே படைத்த அந்த கடவுளை வணஙகுவது எப்படி குற்றமாகும்.அது மட்டுமல்ல. அவர்கள் தஙகளுக்கு மீறிய சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக நம்புகிறார்கள்.

அதை இயற்கை என்றோ அல்லது வேறு ஏதோ வென்று கூட சொல்லிகொள்ளட்டுமே. அதைதான் நாம் கடவுள் என்று சொல்லிக் கொள்கிறோம். எனவே அந்த சகோதரர்களும் கூட ஆத்திகர்கள் தான். அவர்களும் கூட எதையோ நம்புபவர்கள் தான்.


"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே."